சென்னையில் சிறப்பு எஸ்.ஐ.ஜோசப் தூக்கிட்டு தற்கொலை: பணிச்சுமையா என போலீசார் விசாரணை
சிறப்பு எஸ்.ஐ. கருவேலமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொருக்குப்பேட்டை காவல்நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணி புரிந்தவர் ஜோசப்.
இவர் இன்று காலை காசிமேடு துறைமுகத்தின் பின்புறத்தில் உள்ள கருவேல மரத்தில் தூக்கிட்டு தற்கொலை மேற்கொண்டுள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜோசப்பின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜோசப் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் பணிச்சுமையா? அல்லது குடும்ப தகராறா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக காவல்துறையில் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications