அம்மா சிலையேதான்.. என்னா தத்ரூபம்.. என்னா தத்ரூபம்.. அடித்து சொல்லும் ராஜேந்திர பாலாஜி!
ஜெயலலிதா சிலை தத்ரூபமாக உள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video

ஸ்ரீவில்லிபுத்தூர்: அதிமுக தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலை தத்ரூபமாக உள்ளது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பேரனுக்கு மொட்டையடித்துக் காது குத்தும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தினகரன் அணியில் சேர்ந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அவர், அதிமுக ஆட்சி பலமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

கருத்து வேறுபாடு இல்லை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது என்ற அவர் முதல்வரும் துணை முதல்வரும் இணைந்து செயல்படுகின்றனர் என்றார். அவர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

சிலை தத்ரூபமாக உள்ளது
அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜெயலலிதாவின் சிலை தத்ரூபமாக உள்ளது என அடித்துக் கூறினார்.

உண்மையில் கையசைப்பதுபோல்
ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் எப்படி எங்களை பார்த்து கை அசைப்பாரோ அதே போல் உள்ளது என்றும் சிலையில் எந்த குளறுபடியும் இல்லை என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

தினகரன் சிலையை பார்க்கட்டும்
சிலை கருத்து தெரிவிக்கும் தினகரன், சிலையை பார்த்து விட்டு கருத்தை கூறட்டும் என்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும், தினகரன் பக்கம் செல்ல மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு செங்கல்லை உருவமுடியாது
அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களின் பலத்தால், ஆலமரம் போல, அஸ்திவாரம் போட்டு, ஸ்டிராங்காக இருப்பதாகவும் இதிலிருந்து ஒரு செங்கல்லை கூட, யாரும்
உருவ முடியாது இருந்தது என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications