பினாமி அரசு பேச்சை கேட்காமல், உள்ளாட்சி தேர்தல் நடத்துங்கள்.. தேர்தல் கமிஷனுக்கு ஸ்டாலின் கோரிக்கை
பெங்களூர் சிறையில் உள்ள குற்றவாளி சசிகலாவின் பினாமி அரசான அதிமுக அரசின் பேச்சைக் கேட்காமல் உள்ளாட்சித் தேர்தல் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை உடனே தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவின் பினாமி அரசின் சொல்லை மாநில தேர்தல் ஆணையம் கேட்கக் கூடாது என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், வரும் மே 14-ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் இதுவரை தொடங்காமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் கூறுகையில், உள்ளாட்சித் தேர்தல் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் உடனே தொடங்க வேண்டும்.
வரும் மே 14-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்னும் அதற்கான பணிகள் தொடங்காமல் மாநில தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்ப்பது சரியல்ல. தங்கள் அரசின் மீதுள்ள அதிருப்தி காரணமாக தோற்றுவிடுவோம் என்ற எண்ணத்தில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போவதற்கான முயற்சிகளில் அதிமுக கவனம் செலுத்தி வருகிறது.
குற்றவாளியின் பினாமி அரசின் சொல்லை மாநில தேர்தல் ஆணையம் கேட்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications