”பஞ்சர் ஒட்டும் சொலுஷன்” இளைஞர்களை சீரழிக்கும் புதிய போதை அரக்கன்…
சென்னை: டயர்களுக்கு பஞ்சர் ஒட்டப் பயன்படும் சொலுஷன் மூலம் போதையேற்றும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.
இதனால் சிறுவர்களும்,இளைஞர்களும் பெருமளவில் சீரழிந்து வருகின்றனர்.
இப்பழக்கத்தின் மூலம் உள் உறுப்புகளான கல்லீரல்,சுவாசக்குழாய் பாதிக்கப்படுதல் மற்றும் நுரையீரல் புற்று நோய் போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

தடையை மீறி விற்பனை:
அரசாங்கம் பான் மசாலா,குட்கா போன்ற போதைபொருள்களுக்கு தடை விதித்தும்,அவற்றை கடைகளில் விற்க கூடாது என்றும் சட்டம் இயற்றியுள்ளது.ஆனாலும் பல கடைகளில் அவற்றின் மறைமுக விற்பனை நடந்து வருகின்றது.

புதிய தலைமுறையின் புதிய போதை:
இந்நிலையில் போதைப்பழக்கத்தில் இருந்து மீள முடியாத இளைஞர்கள் தற்போது பஞ்சர் ஒட்டும் சொலுஷனை போதைப் பொருளாக பயன்படுத்த தொடங்கி இருப்பது மக்களுக்கிடையே கவலையை உண்டாக்கியுள்ளது.

வாழ்க்கையை பஞ்சர் ஆக்கும் சொலுஷன்:
பஞ்சர் ஒட்டப் பயன்படுத்தப்படும் சொலுஷனை வாங்கி, அதனை காலி தண்ணீர் பாக்கெட்டில் கலந்து முகர்ந்து பார்ப்பதன் மூலம் போதையேற்றிக் கொள்கின்றனர்.இதனால் பலமணி நேரம் போதை நீடிக்கிறது.இந்த பழக்கத்தினால் உடல் உள் உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயத்தைப்பற்றி அவர்கள் அறிவதில்லை.

பரவும் போதை:
விழுப்புரம் மற்றும் திண்டிவனம் பகுதியில் இந்த போதைப்பழக்கம் பரவத்தொடங்கியுள்ளது.இந்த சொலுஷனுக்கு அரசாங்கம் தடை விதித்தால் ஒழிய இளைஞர்களைக் இக்கொடிய பழக்கத்தில் இருந்து காப்பற்ற முடியாது.

வாழ்க்கையா?வாய்க்கரிசியா?:
வாழ்க்கைக்கு விளக்கேற்றும் கண்டுபிடிப்புகளை தர வேண்டிய இளைஞர்கள்,தலைமாட்டில் விளக்கேற்றும் இத்தகைய கண்டுபிடிப்புகளால் அழிந்து போகத்தொடங்கி இருப்பது வருத்ததுக்கு உரிய சமூக பிரச்சினையாகும்.












Click it and Unblock the Notifications