சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு.... தேனியில் முன்கூட்டியே ஒரு வழிப்பாதை அமல்
தேனி: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் வாகனங்களின் போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து தேனி மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக டிசம்பர் 25-க்கு பின்னரே ஒரு வழிப்பாதைத் திட்டம் அமல்படுத்தப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக கம்பம், கூடலூர், லோயர் கேம்ப் பகுதிகளில் சபரிமலைக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.மேலும், மண்டல பூஜை,மகரஜோதி நடைபெறும் நாட்களில் வாகன நெரிசல் இன்னும் அதிகரிக்கும். இதையடுத்து மாவட்ட காவல்துறை சார்பில் ஒருவழிப்பதைத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தேனி மாவட்டத்திலிருந்து சபரி மலைக்குச் செல்லும் வாகனங்கள் கம்பத்திலிருந்து, கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்குச் செல்ல வேண்டும். திரும்பி வரும்போது குமுளி, லோயர் கேம்ப் வழியாக தேனிக்கு வரவேண்டும். சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களுக்கு தேனி அருகே பழனிச் செட்டி பட்டியில் உள்ள வட்டார போக்குவரத்துக்கழக சொதனைச் சாவடியில் தற்காலிக அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது, என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications