தேனியில் காதல் ஜோடி கொலை வழக்கு: ஒருவருக்கு தூக்கு தண்டனை
தேனியில் காதல் ஜோடி கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு ஆயுள் தண்டனையுடன் தூக்கு தண்டனையும் விதிக்கப்பட்டது.
தேனி: தேனி சுருளி நீர்வீழ்ச்சி உள்ள வனப்பகுதியில் காதல் ஜோடி கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு ஆயுள் சிறையும் தூக்கு தண்டனையும் வழங்கி தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்தவர் தங்கநிதி. இவரது மகன் எழில் முதல்வன் (23). இவர் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் முத்துத்தேவன் பட்டியைச் சேர்ந்த கஸ்தூரி என்ற கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர்.
இந்த நிலையில், இருவரும் கடந்த 2011-ஆம் ஆண்ட மே மாதம் 14ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து கஸ்தூரியின் தந்தை தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

காதல் ஜோடிகள்
இந்த நிலையில் நிர்வாண நிலையில் ஒரு இளம்பெண்ணும், ஒரு வாலிபரும் சுருளி அருவிப் பகுதியில் காட்டுப் பகுதியில் சடலமாக கிடந்தவர்கள் எழில் முதல்வன், கஸ்தூரி ஆகியோர் என்பது தெரிய வந்தது.

எழில் முதல்வன் கொலை
விசாரணையில் இருவரும் சுருளி அருவிக்கு சென்றுவிட்டு அங்குள்ள காட்டு பகுதியில் பேசி கொண்டிருந்தபோது ஒரு மர்மக் கும்பல் அங்கு வந்து கஸ்தூரியை உல்லாசமாக இருக்க அழைத்தது. இதை எழில் முதல்வன் தட்டிக் கேட்டதால் அவரை கொலை செய்தது.

7 ஆண்டுகள்
பின்னர் கஸ்தூரியை பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பியோடிவிட்டது. இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

தூக்கு தண்டனை
இந்நிலையில் இந்த வழக்கில் தேனி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செந்தில் குமரேசன் இன்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளி திவாகருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி , தூக்கு தண்டனையையும் விதித்து தீர்ப்பளித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications