ஜெ.வுக்காக தீக்குளிக்க முயற்சித்த தேனி காவலர் நீச்சலில் உலக சாதனை படைத்தவர்
சென்னை: ஜெயலலிதாவை விடுவிக்கக் கோரி நேற்று டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தேனி போலீஸ்காரர் உலக சாதனைப் படைத்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை விதிக்கப் பட்டதை எதிர்த்து தமிழகத்தின் பல பகுதிகளில் அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னையில் டி.ஜி.பி. அலுவலகம் முன்பு போலீஸ் சீருடையில் இருந்த ஒருவர் தீக்குளிக்க முயற்சித்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியில் இருந்த மற்ற போலீஸ்காரர்கள் உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தேனி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் (40 ) என்றும், அங்குள்ள காவல் நிலையம் ஒன்றில் காவலராக பணி புரிந்து வருவதும் கண்டறியப்பட்டது. ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி, தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது.
தீக்குளிக்க முயன்ற வேல்முருகன் 36 அடி உயரத்தில் இருந்து அரை அடி மணலில் குதித்தும், 81 அடி உயரத்தில் இருந்து 4அடி ஆழமுள்ள தண்ணீரில் தலைகீழாக பாய்ந்தும் சாதனை படைத்தவர். 157 கி.மீ., தூரம் இடைவிடாத நீச்சல் அடித்ததற்காக இவர் உலக சாதனையும் படைத்துள்ளார்.
மேற்கூறிய சாதனைகளுக்காக வேல்முருகன் ஜெயலலிதாவைச் சந்தித்து பாராட்டும் பெற்று உள்ளார் எனக் கூறப்படுகிறது.
காவலர் உடையில் தீக்குளிக்க முயன்றதால், வேல்முருகன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
-
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்? -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications