அச்சச்சோ.. காருக்குள்ளே அந்த "மேடம்".. டக்குனு சுற்றிவளைத்த ஆபீசர்ஸ்.. அசிங்கமா மாட்டிக்கிட்டாங்களே
தென்காசி: நைட் டியூட்டி பார்த்துவிட்டு, கிளம்பும்போது, அசிங்கமாக சிக்கி கொண்டார் பெண் அதிகாரி.. என்ன நடந்தது தென்காசி செக்போஸ்ட்டில்?
தமிழ்நாடு - கேரள எல்லையில் புளியரை சோதனைச்சாவடியில் பணி முடித்துச் சென்ற போக்குவரத்து பெண் இன்ஸ்பெக்டர் காரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.2.76 லட்சம் பறிமுதல் செய்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

அதிகாரிகள்: தென்காசி மாவட்டத்தில் உள்ளது புளியரை.. இது தமிழக - கேரளா எல்லையில் உள்ள பகுதியாகும்.. இரு மாநில எல்லை பகுதி என்பதால், தினமும் ஏராளமான வாகனங்கள் கேரளாவுக்கு சென்று வருகின்றன. எனவே, புளியரை மோட்டார் வாகன சோதனை சாவடி செயல்பட்டு வருகிறது.
இந்த சோதனைச்சாவடியில், லாரி டிரைவர்களிடம் லஞ்சம் வாங்குவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்திருக்கிறது.. அதனால், தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் மப்ட்டியில் கிளம்பி வந்துவிட்டனர். நேற்றுமுன்தினம், விடிகாலை முதலே, புளியரை செக்போஸ்ட் அருகிலேயே மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெண் அதிகாரி: அன்றைய தினம், மோட்டார் வாகன ஆய்வாளரான பிரேமா ஞானகுமாரி என்பவர் நைட் டியூட்டியில் ஈடுபட்டிருந்தார்.. ஆனால், அவருக்குகூட போலீசார் இப்படி கண்காணிப்பது தெரியாது.. இந்நிலையில், மறுநாள் காலை டியூட்டியை முடித்துக்கொண்டு, 8.30 மணிக்கு, தன்னுடைய கணவரான ஷாட்சன் என்பவருடன் வீட்டிற்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கற்குடி-தவணைவிலக்கு பகுதியில், திடீரென அந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார்கள்.. பிறகு, காருக்குள் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையும் மேற்கொண்டனர்.. பிரேமா ஞானகுமாரி, கையில் வைத்திருந்த ஹேண்ட்பேக்கையும், இன்ஸ்பெக்டர் வாங்கி சோதனை செய்தார்.. அதில், கட்டுக்கட்டாக பணத்தை இருப்பதை பார்த்து அதிர்ந்தார்.
அதிரடி கைது: மொத்தம் ரூ.2,76,400 பணம் இருந்திருக்கிறது. பிறகு, பிரேமா ஞானகுமாரியை, மறுபடியும் சோதனை சாவடிக்கு அழைத்து சென்று விசாரணையை ஆரம்பித்தனர். அப்போதுதான் அது, கனரக லாரி ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள் என ஏகப்பட்ட வாகன ஓட்டிகளிடம் லஞ்சமாக வாங்கிய பணம் என்பது தெரியவந்தது.,. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார், பெண் அதிகாரி, பிரேமா ஞானகுமாரியையும் கைது செய்துள்ளனர்.
பெண் மோட்டார் வாகன ஆய்வாளர், இப்படி கையும் களவுமாக இரண்டரை லட்ச ரூபாய் பணத்துடன் சிக்கியது, அதிர்ச்சியை தென்காசி மாவட்டத்தில், தந்து வருகிறது. கைதான பிரேமா ஞான குமாரிக்கு 58 வயதாகிறது.. கடந்த 3 நாட்களாகவே, இந்த செக்போஸ்ட்டில் இருந்திருக்கிறார் பிரேமா ஞானகுமார். அப்படியானால், அது 3 நாள் வசூலான லஞ்சப்பணமா? அல்லது வேறு ஏதாவது பணம் வைத்திருந்தாரா? என்ற சந்தேகம் கிளம்பி உள்ளது.
இதையடுத்து, பெண் அதிகாரியின் வீட்டில் ரெய்டு நடத்தப்படுகிறது.. இன்று 2-வது நாளாக பெருமாள்புரத்தில் கிருஷ்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிரடி சோதனை: டிஎஸ்பி பால்சுதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் வீட்டில் உள்ள நகை, பணம் மற்றும் ஆவணங்களை சோதனை செய்து வருகிறார்கள்.. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம் சிக்கியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வட்டாரங்கள் சொல்லியுள்ளதால், விவகாரம் பெரிதாகும் என்றே தெரிகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications