For Daily Alerts
Just In
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் எடப்பாடி கோஷ்டியில் ஆள் இருக்காங்க... கேபி.முனுசாமி நெகிழ்ச்சி
எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் உடையவர்கள் எடப்பாடி கோஷ்டியிலும் உள்ளனர் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
சென்னை: எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் உடையவர்கள் எதிரணியிலும் உள்ளனர் என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.
அதிமுக இணைப்பு குறித்து இன்று ஓபிஎஸ் வீட்டில் கே.பி. முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சசிகலா பேனர்களை அகற்றியதன் மூலம் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எண்ணம் உடையவர்கள் எதிரணியிலும் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழல் அமையும்போது பேச்சுவார்த்தை நடக்கும் என்றார் அவர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், எடப்பாடி அணியினரின் துடுக்கு பேச்சுகளால் கடுப்பான ஓபிஎஸ் அணியின் கே.பி. முனுசாமி, எடப்பாடி அணியினரை கடுமையாக சாடிய நிலையில் தற்போது மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார்.
Comments
English summary
K.P.Munusamy happily says there are someone to fulfill our demands in Edappadi team too.
Story first published: Wednesday, April 26, 2017, 13:13 [IST]