தேச பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வி.வி மினரல்ஸ் மீது ஏன் நடவடிக்கை இல்லை? ஸ்டாலின் கேள்வி
சென்னை: நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை செய்ய மத்திய அரசு ஏன் இதுவரை அக்கறை காட்டவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் கூறியுள்ளதாவது: தாது மணல் கொள்ளை குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதவிற்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ள வி.வி.மினரல்ஸ் கம்பெனியின் 1,00,000 கோடி ரூபாய் முறைகேட்டுப் புகார் தொடர்பாக கவனிக்கப்பட வேண்டிய மேலும் சில அவசர விவகாரங்கள் இருக்கின்றன.

இது ஒரு மெகா ஊழல் என்பது ஒருபுறமிருக்க, சட்டவிரோதமாக லாபம் அடைவதற்காக அணுசக்தி எரிபொருட்களை பிரித்தெடுக்கப் பயன்படும் மோனோசைட் போன்ற கனிமப் பொருட்களை ஏற்றுமதி செய்ததில் தேசிய பாதுகாப்பு கைகழுவப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
இந்திய சட்டங்களின் படி கதிரியக்கத்திற்குப் பயன்படும் கனிமப் பொருட்களை சுரங்கங்களில் இருந்து தனியார் பிரித்து எடுக்கவோ, கையாளவோ கூடாது என்ற விதிமுறைகள் மீறப்பட்டு, மோனோசைட்டை இந்த தனியார் கம்பெனி எடுத்தது மட்டுமின்றி, பெயர் கூறப்படாத நாடுகளுக்கு எல்லாம் ஏற்றுமதியும் செய்திருக்கிறது.
ஆகவே இது பற்றி உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்று வெளியில் தெரிய வந்த பிறகும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் பாஜக தலைமையில் உள்ள மத்திய அரசு ஏன் அமைதி காக்கிறது? அதிலும் முக்கியமாக, இந்த ஏற்றுமதி விவகாரம் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று தெரிந்த பிறகும் இந்த முறைகேடு குறித்து விசாரணை செய்ய மத்திய அரசு ஏன் இதுவரை அக்கறை காட்டவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications