தேச பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வி.வி மினரல்ஸ் மீது ஏன் நடவடிக்கை இல்லை? ஸ்டாலின் கேள்வி
சென்னை: நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை செய்ய மத்திய அரசு ஏன் இதுவரை அக்கறை காட்டவில்லை என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் கூறியுள்ளதாவது: தாது மணல் கொள்ளை குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதவிற்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ள வி.வி.மினரல்ஸ் கம்பெனியின் 1,00,000 கோடி ரூபாய் முறைகேட்டுப் புகார் தொடர்பாக கவனிக்கப்பட வேண்டிய மேலும் சில அவசர விவகாரங்கள் இருக்கின்றன.

இது ஒரு மெகா ஊழல் என்பது ஒருபுறமிருக்க, சட்டவிரோதமாக லாபம் அடைவதற்காக அணுசக்தி எரிபொருட்களை பிரித்தெடுக்கப் பயன்படும் மோனோசைட் போன்ற கனிமப் பொருட்களை ஏற்றுமதி செய்ததில் தேசிய பாதுகாப்பு கைகழுவப்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
இந்திய சட்டங்களின் படி கதிரியக்கத்திற்குப் பயன்படும் கனிமப் பொருட்களை சுரங்கங்களில் இருந்து தனியார் பிரித்து எடுக்கவோ, கையாளவோ கூடாது என்ற விதிமுறைகள் மீறப்பட்டு, மோனோசைட்டை இந்த தனியார் கம்பெனி எடுத்தது மட்டுமின்றி, பெயர் கூறப்படாத நாடுகளுக்கு எல்லாம் ஏற்றுமதியும் செய்திருக்கிறது.
ஆகவே இது பற்றி உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டும். மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றிருக்கிறது என்று வெளியில் தெரிய வந்த பிறகும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் பாஜக தலைமையில் உள்ள மத்திய அரசு ஏன் அமைதி காக்கிறது? அதிலும் முக்கியமாக, இந்த ஏற்றுமதி விவகாரம் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று தெரிந்த பிறகும் இந்த முறைகேடு குறித்து விசாரணை செய்ய மத்திய அரசு ஏன் இதுவரை அக்கறை காட்டவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications