18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்தின் பின்னணியில் மத்திய அரசு இல்லை-தமிழிசை திட்டவட்டம்
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் மத்திய அரசு இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் மத்திய அரசு இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் இன்று அதிரடியாக தகுதிநீக்கம் செய்தார். இதற்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசோ, ஆளுநரோ காரணம் இல்லை என அவர் கூறினார்.
உட்கட்சிப் பிரச்சனை மற்றும் குழப்பமான அரசியல் சூழ்நிலையிலேயே சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். இதற்கு எப்படி மத்திய அரசும் ஆளுநரும் பொறுப்பாக முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆளுநரையும் மத்திய அரசையும் குறை சொல்வது பிரச்சனையை திசை திருப்பும் நடவடிக்கை என்றும் அவர் கூறினார். எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வது சபாநாயகர் தீவிர ஆலோசனை நடத்தியே முடிவு எடுத்திருப்பார் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications