ஓபிஎஸ் அணியினர் பிரிந்து சென்றதால் அதிமுகவிற்கு லாபமோ, நஷ்டமோ இல்லை: சொல்கிறார் ஓஎஸ் மணியன்!
ஓபிஎஸ் அணியினர் பிரிந்து சென்றதால் அதிமுகவிற்கு லாபமோ நஷ்டமோ இல்லை என அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்: ஓபிஎஸ் அணியினர் பிரிந்து சென்றதால் அதிமுகவிற்கோ லாபமோ நஷ்டமோ இல்லை என அமைச்சர் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் அணியினர் தான் பேச்சுவார்த்தைக்கு மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
ஓபிஎஸ் அணியினரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினரும் மாறி மாறி ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால் இரு அணிகளும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவி வருகிறது.

எடப்பாடி அணியினர் அவ்வப்போது விடும் வார்த்தைகள் பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக உள்ளன. இந்நிலையில் எடப்பாடி அணியைச் சேர்ந்த ஓஎஸ் மணியன் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஓபிஎஸ் அணியினர் பிரிந்து சென்றதால் அதிமுகவிற்கு லாபமோ, நஷ்டமோ இல்லை என அவர் தெரிவித்தார். ஓபிஎஸ் அணியினர் தான் பேச்சுவார்த்தைக்கு மறுக்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஓபிஎஸ் அணியினர் எங்களுடன் இணைவார்கள் என்று தாயுள்ளத்துடன் காத்திருக்கிறோம் என்றும் ஓஎஸ் மணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications