ஆட்சியிலும், கட்சியிலும் யாருடைய தலையீடும் இல்லை- அமைச்சர் ஜெயக்குமார்
ஆட்சியிலும் கட்சியிலும் யாருடைய தலையீடும் இல்லை என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆட்சியிலும், கட்சியிலும் யாருடைய தலையீடும் இல்லை என்றும் எடப்பாடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தினகரனும், சசிகலாவும் விரைவில் தங்களுடன் இணைவர் என்று லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை அவ்வப்போது பேசி வருகிறார். இந்நிலையில் 4-ஆம் நபர் பேச்சுக்கே இடம் இல்லை என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் ஆட்சியிலும், கட்சியிலும் யாருடைய தலையீடும் இல்லை. எடப்பாடி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது.
அரசு சார்பில் டெங்குவை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இரட்டை இலை சின்னத்தை மீட்க அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். அந்த சின்னம் எங்களுக்குத்தான் என்றார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications