ஆச்சரியம் ஆனால் உண்மை... ஜெயலலிதா- கருணாநிதி மறைவில் ஒரு ஒற்றுமை !
கருணாநிதி- ஜெயலலிதா மறைவில் ஒரு ஒற்றுமை உள்ளது.
Recommended Video
சென்னை : கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இறப்பில் ஒரு ஒற்றுமை இருந்தது.
ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு ஜாம்பவான்கள் தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்தனர். இருவரிடமும் சிறு சிறு மன வருத்தம் இருந்தாலும் மக்கள் திட்டங்களை செவ்வனே செய்தனர்.
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவருக்குள்ளும் ஆட்சி, அதிகாரம் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏராளமான வித்தியாசங்கள் இருந்தன.
இருவரும் பெரும்பாலும் மக்கள் பிரச்சினைகளுக்காக ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்த வண்ணம் இருப்பர். இந்நிலையில் இரு வேறு துருவங்களாக அரசியலில் பயணித்த இருவரது இறப்பில் ஒரு ஒற்றுமை உள்ளது.
அதாவது ஜெயலலிதா இறந்த தினம்- 05.12.2016- இவற்றை கூட்டினால் 2033 என்று வருகிறது. அதுபோல் கருணாநிதி இறந்த தினம் - 07.08.2018- இவற்றை கூட்டினாலும் 2033 என்று வருகிறது.
மற்றொன்று இந்த இரு தேதிகளையும் மொத்தமாக கூட்டினால் இரட்டை படை எண் 8 வருகிறது. இதுதான் அவர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை ஆகும். இது போல் ஒரு கணக்கு வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருகிறது.