ஒரே நாளில் மயிலாப்பூரில் 30 செ.மீ.. தமிழகத்தில் எந்த பகுதியில், எவ்வளவு மழை பெய்துள்ளது தெரியுமா?
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
Recommended Video

சென்னை: மயிலாப்பூரில்தான் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவு பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில், கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சில இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. அதிகமாக சென்னை மயிலாப்பூர் டிஜிபி அலுவலகத்தில் 30 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

மயிலாப்பூர் டிஜிபி அலுவலகம் பகுதியில் அதிகபட்சமாக 30 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சத்யபாமா பல்கலைகழகத்தில் 20 செ.மீ, தரமணி -19 செ.மீ, நுங்கம்பாக்கம்- 18 செ.மீ, பரங்கிப்பேட்டை , மீனம்பாக்கம், சீர்காழி தலா- 14 செ.மீ, அண்ணா பல்கலைக்கழகம்-13 செ.மீ, தாம்பரம்- 12 செ.மீ, மகாபலிபுரம் -11செ.மீ, கேவிகே காட்டுகுப்பம், யானைக்காரன் சத்திரம், சோழவரம், தலா- 9செ.மீ, கோடம்பாக்கம், காரைக்கால்,ரெட்ஹில்ஸ், சிதம்பரம், பொன்னேரி, எண்ணூர், ஸ்ரீவைகுண்டம், தலா- 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications