என்னை ஏமாற்ற முடியாது, எனது அத்தையைத்தான் 30 வருடமாக ஏமாற்றிக் கொண்டிருந்தனர்.. தீபா பொளேர்!
சசிகலா குடும்பத்தினர் எனது அத்தையை 30 ஆண்டுகாலமாக ஏமாற்றிக் கொண்டிருந்தனர் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: என்னை அவர்களால் (சசிகலா குரூப்) ஏமாற்ற முடியாது. ஆனால் எனது அத்தையாத்தான் 30- வருடமாக அவர்கள் ஏமாற்றிக் கொண்டிருந்தனர் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அதிரடியாக கூறியுள்ளார்.
தந்தி டிவிக்கு தீபா சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில் பேட்டி கண்ட ரங்கராஜ் பாண்டே கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சற்றும் தடுமாறாமல் தெள்ளத் தெளிவாக பதிலளித்து அசத்தினார் தீபா.

பாண்டே ஒரு கேள்வியின்போது உங்களை அவர்கள் ஏமாற்ற வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டார். அதற்கு தீபா சட்டென்று, என்னை அவர்கள் ஏமாற்றினார்கள் என்று சொல்லவில்லையே. என்னை அவர்களால் ஏமாற்றவும் முடியாது. ஆனால் எனது அத்தையைத்தான் 30 வருடமாக ஏமாற்றிக் கொண்டிருந்தனர் என்று அதிரடியாக கூறி பாண்டேவேயே மடக்கி விட்டார்.
பாண்டே கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே பதிலளித்த தீபாவின் நிதானம் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது என்பதை மறுக்க முடியாது.












Click it and Unblock the Notifications