கருஞ்சிகப்பு நிறமாக மாறிய திருச்செந்தூர் கடல்.. ரசாயன கழிவு கலந்ததா? பக்தர்கள் அச்சம் !
திருச்செந்தூர் கடலில் எண்ணை போன்ற ரசாயன படலம் மிதப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கடல் பகுதி திடீரென கருஞ்சிகப்பு நிறத்தில் மாறி காட்சி அளித்தது. கடல் திடீரென நிறம் மாறியதால் மக்கள் அச்சமடைந்தனர். ரசாயன கழிவு கலந்தததே இந்த மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
வழக்கமாக கடலின் கரை பகுதி நீலநிறமாகவும், ஆழ்கடல் பகுதி பச்சை நிறமாகவும் காடசி தரும். ஆனால் நேற்று மாலை 3 மணி அளவில் திருச்செந்தூர் கடலில் கருஞ்சிவப்பு நிறத்தில் எண்ணெய் படலம் போன்று பரவி காணப்பட்டது.
வள்ளி குகை அருகில் இருந்து கடலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எண்ணெய் படலமாக காட்சி அளித்தது. இதனால் பக்தர்கள் யாரும் கடலில் குளிக்கவில்லை.
ஆழ் கடலில் காணப்படும் ஒருவகை பாசி, தற்போது கடலுக்கு மேல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடலில் ரசாயனம் கலந்ததது போல் காணப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்யதற்காக மீன்வளத்துறை ஆய்வாளர்கள் திருச்செந்தூர் சென்றுள்ளனர்.