விடுதலை சிறுத்தைகளுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும்- திருமாவளவன் 'டிமாண்ட்'

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அதன் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

அரியலூரில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

2009-ம் ஆண்டு சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றேன். கடந்த 5 ஆண்டுகளாக இந்த பகுதி மக்களுக்கு என்னால் முடிந்த திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன்.

Thiruma seeks more seats in DMK allinace

அரியலூர் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள் செய்யவேண்டும். 1-வது பிளாட்பாரம் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சரிடம் மனு கொடுத்தேன். அதன்படி தற்பொழுது அரியலூர் ரயில் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நான் வரும் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறேன். கடந்த முறை 2 தொகுதிகளில் நாங்கள் போட்டியிட்டோம். அதில் நான் மட்டும் வெற்றி பெற்றேன். ஒரு எம்.பி. மட்டும் இருந்ததால் அதிக பணிகளை நிறைவேற்ற முடியவில்லை.

அதனால் தி.மு.க. கூட்டணியில் வரும் தேர்தலில் எங்களுக்கு கூடுதல் இடங்களில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்.

இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+