தமிழில் பேசக்கூடாதா? - தயாரிப்பாளர் கில்டை எதிர்த்து திருமா, சீமான் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்க ( கில்டு ) கூட்டத்தில் தமிழில் பேசுபவர்களுக்கு அனுமதி இல்லை என்றும், சங்கத்தின் மாத இதழை தமிழில் வெளியிட முடியாது என்றும் அறிவித்த இந்திக்காரர் கிரிதாரிலால் எல்.நாக்பாலையும் அவருக்கு துணை நிற்போரையும் கண்டித்து தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கில்டின் துணைத் தலைவர் கா.கலைக்கோட்டுதயம், செயலாளர் ஜாகுவார் தங்கம், பொதுக்குழு உறுப்பினர் ஆதிராம் உள்ளிட்டோரை சங்கத்திலிருந்து நீக்கியதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.
இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், வணிகர் சங்கங்களின் பேரவைத்தலைவர் த.வெள்ளையன், தியாகு, இயக்குநர் செல்வமணி, இயக்குநர் வி.சேகர், தமிழன் தொலைக்காட்சி இயக்குநர் கலைக்கோட்டுதயம், திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் பங்கேற்று கண்டனங்களைத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications