For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமாவளவன் பிறந்தநாள்: மேத்தா, கபிலன் கவியரங்க கச்சேரி களைகட்டுது

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் ரத்ததான முகாம், மருத்துவ முகாம் நடத்தி கொண்டாடி வருகிறார்கள்.

திருமாவளவனின் 52வது பிறந்தநாள் ஆகஸ்ட் 17ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள், பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். கபடி போட்டி நடத்துவது, ரத்ததான முகாம் நடத்துவது என்று பிறந்தநாள் நிகழ்ச்சிகள் களை கட்டியுள்ளன.

Thirumavalavan celebrats 52th birth day

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் நாளை மாலை 5மணிக்கு கவியரங்கம் நடைபெறுகிறது. இயற்கையின் பார்வையில் இன விடுதலை என்ற தலைப்பில் நடக்கும் கவியரங்கத்திற்கு கவிஞர் மேத்தா தலைமை தாங்குகிறார். கவிஞர் கபிலன் வரவேற்ற கவிதை படிக்கிறார்.

நீர், நிலம், நெருப்பு, வான், காற்று ஆகிய ஐந்து நிலைகளில் கவிஞர்கள் விவேகா, யுகபாரதி, இளைய கம்பன், அண்ணாமலை, நந்தலாலா ஆகியோர் உரையாற்றுகிறார்கள்.

வீரக்குமார், வன்னி அரசு, தகடூர் தமிழ் செலவன் உள்ளிட்டோர் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.

English summary
Thol Thirumavalavan, chief of VCK party will celebrate his 52th birth anniversery on Aguest 17.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X