'வெளிச்சம்' டிவி தொடங்க சசி கணவர் நடராஜனிடம் ரூ225 கோடி வாங்கினேனா? திருமாவளவன் விளக்கம்
வெளிச்சம் டிவி தொடங்க சசிகலா கணவர் நடராஜனிடம் ரூ225 கோடி பணம் வாங்கவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான வெளிச்சம் தொடங்குவதற்கு சசிகலாவின் கணவர் நடராஜனிடம் ரூ225 கோடி வாங்கியதாக பொய்யான தகவல் பரபரப்படுவதாக அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு சென்ற முதல் அரசியல் கட்சித் தலைவர் திருமாவளவன். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலாவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தவரும் திருமாவளவன்.

அதேநேரத்தில் தமிழகத்தில் பாஜக காலூன்ற விடக்கூடாது என்பதற்காக அதிமுகவுக்கு ஆதரவு கருத்துகளை தெரிவிப்பதாகவும் திருமாவளவன் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெளிச்சம் டிவி சேனலில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் சசிகலா கணவர் நடராஜன் மூலமாக ரூ225 கோடி பெறப்பட்டு அதில்தான் வெளிச்சம் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதாகவும் தகவல்கள் ரெக்கை கட்டி பறந்தன. ஆனால் இவற்றை திட்டவட்டமாக திருமாவளவன் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் அளித்துள்ள விளக்கத்தில், தம்முடைய பொன்விழாவை முன்னிட்டு வெளிச்சம் டிவி தொடங்க கட்சி தொண்டர்களிடம் இருந்து பெற்ற தங்க காசுகள் பெறப்பட்டன என்றும் வருமான வரி, அமலாக்கத்துறை சோதனை என்பதெல்லாம் அச்சுறுத்த்துவற்காக பரப்பப்படுகின்றன எனவும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications