வைகோ அணிவித்த மோதிரத்தை கழற்றி வைத்த திருமாவளவன்!
சென்னை: வைகோ அணிவித்த மோதிரத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அணிந்துகொள்வதை தவிர்த்து வருகிறார்.
மக்கள் நல கூட்டணியிலுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, 'மோதிரம்' சின்னத்தை, தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.
இதையடுத்து, நெல்லையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில், மதிமுக பொதுச்செயலர் வைகோ, திருமாவளவனுக்கு, 2 சவரன் மதிப்புள்ள மோதிரம் அணிவித்தார்.

தவிர்த்தவர்
தாய், தந்தை மற்றும் நண்பர்கள் கொடுத்த போது கூட மோதிரம் அணிய மாட்டேன் என்று தவிர்த்தவர் திருமாவளவன் என்று கூறப்படுவதுண்டு. ஆனால் வைகோ கொடுத்த மோதிரத்தை அணிந்து கொண்டார்.

கழற்றமாட்டேன்
இந்த நிகழ்வுக்கு பிறகு நடந்த, அனைத்து தேர்தல் பொதுக்கூட்டத்திலும், திருமாவளவனுக்கு அணிவித்த மோதிரம் குறித்து, வைகோ, மறக்காமல் பேசி வருகிறார். அந்த மோதிரத்தை கழற்ற மாட்டேன் என்று திருமாவளவன் கூறியுள்ளதாகவும், வைகோ பெருமிதம் தெரிவித்து வந்தார்.

தவிர்ப்பு
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தண்டையார்பேட்டையில் நடந்த, தேமுதிக-மக்கள்நல கூட்டணி-தமாகா வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்ட திருமாவளவன், மோதிரம் எதுவும் அணியவில்லை என்பதை தொண்டர்களால் கவனிக்க முடிந்தது.

ஆசையில்லைங்க
மோதிரம் அணிவதை திருமாவளவன் தவிர்த்து வருவது குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரங்கள் கூறுகையில், நகைகள் மீது திருமாவளவனுக்கு பற்று கிடையாது. விருப்பம் இல்லாததால், அந்த மோதிரத்தை அணியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications