பிரிட்ஜோவை சுட்டுக் கொன்ற இலங்கையை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வேண்டும்.. திருமா ஆவேசம்
ராமேஸ்வர மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த அட்டூழியத்தைச் செய்த இலங்கையிடம் சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி திருமாவளவன் போராட்டம் நடத்தினார்.
சென்னை: ராமேஸ்வர மீனவர் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து விசிக சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் திருமாவளவன் போராட்டம் நடத்தினார்.
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய மீனவர் பிரிட்ஜோவை இலங்கை கடற்படையினர் நேற்று முன் தினம் நடுகடலில் சுட்டுக் கொன்றனர். இலங்கை கடற்படையின் இந்த அராஜகப் போக்கிற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் மீனவர்கள் அமைப்பு சார்பில் பல்வேறு எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரசின் அராஜகப் போக்கை கண்டித்து பேசிய திருமாவளவன், இலங்கை மீது சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டு இலங்கை அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார்கள்.
-
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications