Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணித்த பிரதமருக்கு திருமாவளவன் நன்றி

Subscribe to Oneindia Tamil

Thirumavalavan thanks PM for not attending CHOGM
சென்னை: ஒட்டு மொத்தத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணித்ததற்காக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை....

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து காமன்வெல்த் மாநாட்டுக்குப் போவதில்லை என முடிவெடுத்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்த மாநாட்டை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கவேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டின் கோரிக்கை. அதைப் பரிசீலித்து வெளியுறவுத் துறை அமைச்சர் தலைமையில் ஒரு குழுவை அந்த மாநாட்டுக்கு அனுப்புவதென்ற முடிவைக் கைவிட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இலங்கை அரசின் போர்க்குற்றங்களை சேனல் 4 தொலைக்காட்சி அம்பலப்படுத்தி வருகிறது. போர் முடிந்து நான்கு ஆண்டுகளான பின்னரும் கூட இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறை குறையவில்லை என்பதை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து சுட்டிக்காட்டிவருகின்றன.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எம்.பியான லீ ரியான்னன் மற்றும் நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த எம்.பியான ஜேன் லோகி ஆகியோரும்; பிபிசி செய்தியாளர் ஃப்ரான்சஸ் ஹாரிஸன் அவர்களும் இலங்கையில் போருக்குப் பின்னரும் தமிழ்ப் பெண்கள் இலங்கை ராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுவதை ஆதாரங்களோடு வெளிப்படுத்தியுள்ளனர்.

போர்க்குற்றங்கள் இழைத்தவர்களை இலங்கை அரசு தண்டிக்கவில்லையென்றால் சுயேச்சையான சர்வதேச விசாரணையைக் கோருவதுதவிர வேறுவழியில்லை என இங்கிலாந்து பிரதமர் தகேமரூன் அவர்கள் எச்சரித்திருக்கிறார்.

தமிழர் பகுதிகளைப் பார்வையிடப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளவேண்டும். காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை இடைநீக்கம் செய்வதற்கு இந்திய அரசு முன்முயற்சி எடுக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்க இந்தியா ஆதரவளிக்கக்கூடாது.

2014 மார்ச் மாதத்தில் ஐ.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் மீண்டும் இலங்கை குறித்த விவாதம் நடைபெறவிருக்கிறது. அப்போது சுயேச்சையான சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்கு ஆணையிடப்படலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதற்கு ஒத்துழைப்பு தரும்விதமாக இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் தரவேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+