இலங்கைதமிழர் பிரச்சனை.. பன்னாட்டு விசாரணை தேவை.. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திருமா கோரிக்கை
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பன்னாட்டு விசாரணை தேவை என்று திருமாவளவன் கோரியுள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சனைத் தொடர்பாக பன்னாட்டு விசாரணை தேவை என்பதை மத்திய அரசிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
இலங்கைத் தமிழர் பிரச்சனையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய வகையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார் வரலாற்று பதிவு. அவரைப் பின்பற்றி தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய வகையில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

இதுதொடர்பான தேவைப்பட்டால் முதல்வரை சந்தித்து பேசவும் தயாராக உள்ளோம். இதனை வலியுறுத்தும் வகையில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம். போராட்ட எப்போது நடைபெறும் என்ற தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த போராட்டத்தில் பங்கேற்றும் கட்சிகள் அனைத்தும், ஒரு கட்சி ஒரு நாளைக்கு என்ற அளவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்னாள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்.
மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. இந்தக் கட்சிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications