இலங்கைதமிழர் பிரச்சனை.. பன்னாட்டு விசாரணை தேவை.. சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற திருமா கோரிக்கை
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் பன்னாட்டு விசாரணை தேவை என்று திருமாவளவன் கோரியுள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: இலங்கைத் தமிழர் பிரச்சனைத் தொடர்பாக பன்னாட்டு விசாரணை தேவை என்பதை மத்திய அரசிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
இலங்கைத் தமிழர் பிரச்சனையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய வகையில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார் வரலாற்று பதிவு. அவரைப் பின்பற்றி தற்போதைய முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய வகையில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

இதுதொடர்பான தேவைப்பட்டால் முதல்வரை சந்தித்து பேசவும் தயாராக உள்ளோம். இதனை வலியுறுத்தும் வகையில் தொடர் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளோம். போராட்ட எப்போது நடைபெறும் என்ற தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த போராட்டத்தில் பங்கேற்றும் கட்சிகள் அனைத்தும், ஒரு கட்சி ஒரு நாளைக்கு என்ற அளவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்னாள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும்.
மனித நேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ. மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இப்போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. இந்தக் கட்சிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
-
அக்கா எனும் அம்மா! பானுமதி இறப்பால் சுக்குநூறான திருமாவளவன்! கள்ளக்குறிச்சி வேட்பாளர் யார் தெரியுமா? -
திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காதுன்னு திருமாவே நினைக்கிறாரா? வருத்தப்பட்ட ஸ்டாலின்.. என்னாச்சு? -
அசுர பலம்.. சட்டசபையில் நான் இருக்கணும்! திருமா முடிவு.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ரியல் காரணம் -
2026 தேர்தலுக்கு பின்.. அரசியலே மாறும்.. புதிர் போட்ட திருமா.. மாநில அரசியலுக்கு திரும்புவது ஏன்? -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications