துணைவேந்தர் பதவிகளில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க திருமாவளவன் வலியுறுத்தல்
துணைவேந்தர் பதவிகளில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கும் துணை வேந்தர் பதவிகளில் உரிய பிரதிநிதித்துவம் அளித்திட தேர்வுக்குழுவும், தமிழக அரசும், ஆளுரும் முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் 24 பல்கலைக் கழகங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் துணைவேந்தர் பதவிகள் மற்றும் சில முதன்மை அதிகாரமுள்ள பதவிகளில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு கல்வி தகுதியும், முதுநிலைத் தகுதியும் இருந்தாலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள் என்பது வேதனைக்குரியதாகும்.

தற்போது, அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் துணைவேந்தர் பதவிகள் ஓராண்டுக்கும் மேலாக காலியாக உள்ளன. காலியாக உள்ள அவ்விடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
கடந்த காலங்களில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்கள் பதவிகளை நிரப்புகின்றபோது பல்வேறு குளறுபடிகள் நடந்தன. அதனையொட்டி நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளன.
குறிப்பாக, அரசியல் பின்புலம் மற்றும் பணபலம் ஆகியவற்றை அளவுகோலாக வைத்து அப்பதவிகள் நிரப்பப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. இவைப்போன்ற காரணங்களால் உரிய தகுதியுள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் துணைவேந்தர் பதவிகளுக்கு வரமுடிவதில்லை.
குறிப்பாக, வரலாற்று சிறப்புவாய்ந்த அண்ணா பல்கலைக் கழகத்தில் இதுவரை தலித் ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதேயில்லை. அப்படியென்றால், கல்வித் தகுதியும், முதுநிலைத் தகுதியும் பெற்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் அங்கு ஒருவருமே இல்லையா என்கிற கேள்வி எழுகிறது. இது மிகவும் கண்டனத்திற்குறியது.
தற்போது மேற்கண்ட பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை நியமனம் செய்வதற்கு தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவானது அரசியல் தலையீடு இல்லாமல் சமூகநீதியைப் பாதுகாக்கும் வகையில் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கும் துணை வேந்தர் பதவிகளில் உரிய பிரதிநிதித்துவம் அளித்திட தேர்வுக்குழுவும், தமிழக அரசும், ஆளுரும் முன்வர வேண்டும்'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications