குண்டர் சட்டம் ரத்து - திருமுருகன் காந்தி உட்பட 4 பேர் சிறையில் இருந்து விடுதலை
குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டதை அடுத்து திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
Recommended Video

சென்னை: புழல் சிறையில் இருந்து விடுதலையான திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தாரை தப்பட்டை முழங்க மாலை அணிவித்து ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
கடந்த 21ஆம் தேதி மெரினாவில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை திருமுருகன் காந்தி ஒருங்கிணைத்து நடத்தினார்.
மெரினாவில் போராட்டம் நடத்த தடை இருக்கும் நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் உள்ளிட்டோர் கடந்த மே 23ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

குண்டர் சட்டம்
கைதான 4 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். அந்த 4 பேர் மீதான குண்டர் சட்டம் வாபஸ் பெறப்படவில்லை.

ஜாமீன் தள்ளுபடி
இந்நிலையில் ஜாமீன் கோரிய இவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து தங்கள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யும்படி திருமுருகன் உள்பட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

குண்டர் சட்டம் ரத்து
இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அதில் திருமுருகன் காந்தி உள்பட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து அவர்கள் நால்வரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு
புழல் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரையும் மே 17 இயக்கத்தினர் மாலை அணிவித்து தாரை தப்பட்டை முழங்க வரவேற்றனர்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications