வளர்மதிக்கு நிவாரணம்.. திருமுருகன் காந்திக்கு என்று கிடைக்கும் குண்டாஸிலிருந்து விடுதலை?
வளர்மதியை போல் திருமுருகன் காந்தியும் குண்டர் சட்டத்திலிருந்து விடுவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: வளர்மதியை போல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தியும் விடுவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
அமைதியை சீர்குலைப்போர் மீது போடப்படும் குண்டர் சட்டத்தை முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீதும், ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடிய சேலம் மாணவி வளர்மதி மீதும் போடப்பட்டது.
இதனால் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சட்டத்தை திரும்ப பெறுமாறு கோரிக்கை விடுத்தும் அரசு காதில் போட்டு கொள்ளவில்லை.

நினைவேந்தல் நிகழ்ச்சி
முள்ளிவாய்க்கால் பகுதியில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக ஆண்டுதோறும் மெரினாவில் மே 17 இயக்கம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு அதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி தடையை மீறி நிகழ்ச்சியை நடத்தினர்.

கைது
இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அதேபோல் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக துண்டுபிரசுரம் வழங்கியதாக சேலம் மாணவி வளர்மதியும் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

அரசு அலட்சியம்
இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள், அரசியல் அமைப்புகள் கேள்வி எழுப்பியும் மாணவிக்கு எதிராகவே தமிழக அரசு செயல்பட்டது. இந்நிலையில் மாணவியின் தந்தை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது.

அரசுக்கு சாட்டையடி
பல்வேறு தரப்பினர் மாணவி மீது குண்டர் சட்டம் போடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோதும் எந்த நடவடிக்கையையும் முதல்வர் எடுக்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசின் ஒடுக்குமுறைக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்துள்ளது.
Recommended Video


திருமுருகன் காந்திக்கு எப்போது?
இதேபோல் திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் அவரது ஆதரவாளர்களும் எதிர்பார்க்கின்றனர். தஇவர் விஷயத்திலும் மௌனத்தையே பதிலாக கொண்ட தமிழக அரசுக்கு மற்றொரு சாட்டையடியை உயர் நீதிமன்றம் வழங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications