கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்
சென்னை: கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த இளங்கோவன் தமது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் 4 மாத காலம் இப்பதவி காலியாக இருந்தது.

இந்த நிலையில் இன்று திருநாவுக்கரசரை புதிய தலைவராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை அண்ணா நகரில் உள்ள தமது இல்லத்தில் திருநாவுக்கரசருக்கு காங்கிரசார் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:
கர்நாடகாவில் தமிழர்கள் மீதான தாக்குதல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். தமிழகத்திலும் இளைஞர்கள் நிதானமாக செயல்பட வேண்டும். இங்கு வாழும் கன்னட மக்களைத் தாக்க கூடாது.
சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு பிரதமர் மோடி, கர்நாடகா முதல்வர் சித்தராமையா நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக காங்கிரஸில் கோஷ்டி பூசல் எப்போதும் இருந்தது இல்லை. இனியும் இருக்காது.
டெல்லி சென்று மேலிடத் தலைவர்களை சந்தித்துவிட்டு பின்னர் தமிழக தலைவர்கள், தொண்டர்களையும் சந்திப்பேன்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.












Click it and Unblock the Notifications