பெரியார் சிலையை அவமதிக்கத் தூண்டியவன் பைத்தியக்காரன்.. திருநாவுக்கரசர் ஆவேசம்
Recommended Video
சென்னை: தந்தை பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்பவன் மன நோயாளியாக இருக்க வேண்டும் அல்லது அவனை ஏவியவன் பைத்தியக்காரனாக இருக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆவேசமாக கூறியுள்ளார்.
பெரியார் 140வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து திருநாவுக்கரசர் அஞ்சலி செலுத்தினார். அவருடன் முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.
அப்போது பெரியார் சிலையை அவமதித்த பாஜக வக்கீல் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர், பெரியார் சிலையை ஒருவன் அவமதிக்கிறான் என்றால் ஒன்று அவன் மன நோயாளியாக இருக்க வேண்டும். அல்லது மன நோயாளி யாராவது ஏவி விட்டவனாக இருக்க வேண்டும். காவல்துறை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், ஹைகோர்ட்டாவது மயிராவது என்று பேசிய திமிர் பிடித்த எச். ராஜா ஏவி விட்டவன்தான் இன்று பெரியார் சிலையை அவமதித்துள்ளான். எனவே ஹைகோர்ட்டாவது மயிராவது என்று கூறிய திமிர் பிடித்த எச். ராஜாவை தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.