எனக்கு ஆதரவு கொடுத்துட்டு… மோடி பிரதமராகனும்னு சொல்றாரே? கிலியில் திருநாவுக்கரசர்

Subscribe to Oneindia Tamil

ராமநாதாபுரம்: அழகிரியை சந்தித்து ஆதரவு கேட்டு அவர் ஆகட்டும் பார்க்கலாம் என்று சொல்லியனுப்பியதில் மகிழ்ச்சியில் இருந்த திருநாவுக்கரசர், திடீரென்று மதிமுகவிற்கு ஆதரவு, பாஜக தலைவர்களுடன் சந்திப்பு என பிஸியாக இருப்பதில் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் தன்னந்தனியே களம் காண்கிறது காங்கிரஸ். கட்சியின் தேசியச் செயலாளரான திருநாவுக்கரசர், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கே, தி.மு.க. சிட்டிங் எம்.பி.யும் அழகிரியின் ஆதரவாளருமான ஜே.கே. ரித்தீஷ்க்கு சீட் கொடுக்காததால், அவருடைய ஆதரவாளர்கள் ஓட்டுக்களை வளைக்க அரசர் பிளான் செய்துள்ளாராம்.

Thirunavukkarasar is worried over Azhagiri's support

இதற்காக ஒரு சுப நாளில் அழகிரியைச் சந்தித்து அவர் பேசி ஆதரவு கேட்டுள்ளார். அவரும் ஆகட்டும் 'பார்க்கலாம்' என்று பிடிகொடுக்காமல் பேசி அனுப்பிவிட்டாராம்.

இதில் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் அடைந்திருந்தார் திருநாவுக்கரசர், இந்த நிலையில், 'மோடிதான் அடுத்த பிரதமராக வர வேண்டும்' என்று அழகிரி ஸ்டேன்ட்மென்ட் விடுத்தார். இதில் அதிர்ந்து போனார் அரசர்.

தொடர்ந்து பாஜக வேட்பாளர்களும், மதிமுக வேட்பாளர்களும், அழகிரி ஆதரவு கேட்டு படையெடுக்கவே, கிலியில் உள்ளாராம் திருநாவுக்கரசர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+