ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் - திருநாவுக்கரசர் வேண்டுகோள்
சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் விலகியதைத் தொடர்ந்து, சமீபத்தில் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார் திருநாவுக்கரசர். அதனைத் தொடர்ந்து முக்கிய கட்சித் தலைவர்களை நேரில் அவர் சந்தித்து வருகிறார்.

அந்தவகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனை நேற்று திருநாவுக்கரசர் நேரில் சந்தித்தார். சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின் போது மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்திரராசன், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, பொதுச் செயலாளர்கள் கே.சீரஞ்சீவி, சி.டி.மெய்யப்பன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

சந்திப்புக்கு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து திருநாவுக்கரசர் கூறியதாவது: முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலத்தில் அரசியல் செய்வது தவறு. ஜெயலலிதா அப்பா, அம்மா, கணவர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் தனியாக இருந்து வருகிறார். தோழிகள் சிலர் இருக்கிறார்கள். இருந்தாலும், அவரது உடல்நிலைக்கு தலைமை செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் தான் பொறுப்பு.

தேவைப்பட்டால் வெளிநாட்டு மருத்துவர்களை அழைத்து அவரை பரிசோதிக்க வேண்டும். அவரது உடல்நிலை குறித்து யாரும் வதந்திகளை பரப்ப கூடாது. தமாகா தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது அவர்களது முடிவு. நாங்கள் திமுகவுடன் பேசி வருகிறோம். அந்தந்த மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள காங்கிரஸ் குழுக்கள் எந்தந்த இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து திமுக குழுக்களுடன் பேசி வருகின்றனர்.
அக்டோபர் 3ம் தேதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே அதிமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது. வேட்பாளர் பட்டியலை என்ன இரவோடு இரவாகவா தயார் செய்தார்கள். முன்கூட்டியே தேர்தல் தேதி அறிவிப்பு தெரிந்து தயார் செய்யப்பட்ட பட்டியலை தான் வெளியிட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு தொடக்கத்திலேயே சரியில்லை. எனவே, மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என யார் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டால் என்ன? சட்டப்படி தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
அடம்பிடித்து ஈரோடு கிழக்கை கேட்டு வாங்கிய காங்கிரஸ்.. இப்போ எங்க போச்சு! நெட்டிசன்கள் சரமாரி கேள்வி! -
கொங்கு வேளாளர் கவுண்டரை புறக்கணிச்சிட்டாங்க... காங்கிரஸ் மீது ஜோதிமணி எம்பி குற்றச்சாட்டு -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்! -
சிங்காநல்லூரில் வசமாக சிக்கிய காங்கிரஸ்.. வேட்பாளர் பெயரை பாருங்க! அலப்பறை ஓவரா இருக்கே! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
சிங்காநல்லூர் உள்பட 5 தொகுதிகளால் மோதல்.. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?












Click it and Unblock the Notifications