மிளகாய் சாகுபடி பாதிப்பு... தண்ணீர் இல்லாமல் திண்டாடும் நெல்லை விவசாயிகள்!
திருநெல்வேலி அருகே மிளகாய் சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.
திருநெல்வேலி : நெல்லை அருகே மிளகாய் சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் அல்லாடி வருகின்றனர். விளைச்சலில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க விவசாயிகள் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் போதிய தண்ணீர் இல்லாத நிலையில் விளைச்சல் அறுவடை சமயத்தில் கைகொடுக்குமா என்ற கவலையில் உள்ளனர் மிளகாய் விவசாயிகள்.
நெல்லை அருகே வேலாயுதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்தாண்டு பருவமழை கைவிட்டதால் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பலத்த நஷ்டத்துக்கு ஆளாகினர். இந்த ஆண்டாவது பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் கம்பு, சோளம், உளுந்து போன்ற பயிர்களை நடவு செய்தனர்.

ஆனால் இந்தாண்டும் பருவமழை போக்கு காட்டி வருகிறது. நிலத்தில் விதைத்த விதைகள் முளைக்காமல் பாதியிலேயே நிற்கின்றன. இதனால் மனமுடைந்த விவசாயிகள் தளராமல் தங்கள் நிலத்தை டிராக்டர் மூலம் உழுது சமன் செய்து தண்ணீரை விலைக்கு வாங்கி மிளகாய் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்தாண்டு பருவமழை பொய்ந்து விவசாயம் இல்லாமல் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டது. பருவமழை இந்தாண்டு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் வழக்கம் போல் விவசாய பணிகளை மேற்கொண்டோம். ஆனால் எங்கள் பகுதி கிராமத்தில் பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.
இதனால் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். ரூ. 10 ஆயிரம் வரை செலவு செய்து மிளகாயை விதைத்துள்ளோம். இது விளைந்து அறுவடை நடந்தால் தான் லாபம் கிடைக்குமா இல்லையா என்பதை சொல்ல முடியும், போட்ட பணமாவது கையில் கிடைக்குமோ தெரியவில்லை என்று வேதனையுடன் கூறகின்றனர் அவர்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications