மிளகாய் சாகுபடி பாதிப்பு... தண்ணீர் இல்லாமல் திண்டாடும் நெல்லை விவசாயிகள்!
திருநெல்வேலி அருகே மிளகாய் சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.
திருநெல்வேலி : நெல்லை அருகே மிளகாய் சாகுபடிக்கு போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் அல்லாடி வருகின்றனர். விளைச்சலில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க விவசாயிகள் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் போதிய தண்ணீர் இல்லாத நிலையில் விளைச்சல் அறுவடை சமயத்தில் கைகொடுக்குமா என்ற கவலையில் உள்ளனர் மிளகாய் விவசாயிகள்.
நெல்லை அருகே வேலாயுதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்தாண்டு பருவமழை கைவிட்டதால் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பலத்த நஷ்டத்துக்கு ஆளாகினர். இந்த ஆண்டாவது பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் கம்பு, சோளம், உளுந்து போன்ற பயிர்களை நடவு செய்தனர்.

ஆனால் இந்தாண்டும் பருவமழை போக்கு காட்டி வருகிறது. நிலத்தில் விதைத்த விதைகள் முளைக்காமல் பாதியிலேயே நிற்கின்றன. இதனால் மனமுடைந்த விவசாயிகள் தளராமல் தங்கள் நிலத்தை டிராக்டர் மூலம் உழுது சமன் செய்து தண்ணீரை விலைக்கு வாங்கி மிளகாய் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்தாண்டு பருவமழை பொய்ந்து விவசாயம் இல்லாமல் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டது. பருவமழை இந்தாண்டு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் வழக்கம் போல் விவசாய பணிகளை மேற்கொண்டோம். ஆனால் எங்கள் பகுதி கிராமத்தில் பருவ மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.
இதனால் தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்கி விவசாயம் செய்து வருகிறோம். ரூ. 10 ஆயிரம் வரை செலவு செய்து மிளகாயை விதைத்துள்ளோம். இது விளைந்து அறுவடை நடந்தால் தான் லாபம் கிடைக்குமா இல்லையா என்பதை சொல்ல முடியும், போட்ட பணமாவது கையில் கிடைக்குமோ தெரியவில்லை என்று வேதனையுடன் கூறகின்றனர் அவர்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications