ஜெ. ஆன்மா சாந்தியடைய அதிமுக கோஷ்டிகள் இணையனுமாம்.. கருணாஸ் 'டச்சிங்' டயலாக்!
அதிமுகவின் 4 ஆண்டு கால ஆட்சி சிறப்பாக நடந்தால் மட்டுமே ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தியடையும் என்று ஈபிஎஸ் அணி எம்எல்ஏ கருணாஸ் கூறியுள்ளார்.
சென்னை : அதிமுகவை அரும்பாடுபட்டு வளர்த்த ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு எதிர்மறையான செயல்பாடுகளே தற்போது அரங்கேறி வருவதாக திருவாடாணை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் அம்மா அணி மற்றும் அதிமுகவின் புரட்சித்தலைவி அம்மா அணி இணைய வேண்டும் என்று ஈபிஎஸ அணியைச் சேர்ந்தவர்கள் பல வகையிலும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. கட்சியின் எதிர்கலாம் என்ன ஆகுமோ என்ற பயம் ஒருபுறம் இருந்தாலும் எஞ்சியிருக்கும் 4 ஆண்டு கால ஆட்சியில் தங்களது பதவியை தக்கவைத்து கொள்ள தேவையான முயற்சிகளை ஆட்சியாளர்கள் எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு அங்கமாகவே ஜெயலலிதாவின் கடும்உழைப்பிற்கு பலனாக கிடைத்த ஆட்சியை தொடர்ந்து நடத்த தேவையான பணிகளில் ஈபிஎஸ் அணி இறங்கியுள்ளது. சென்னையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவாடாணை தொகுதி எம்எல்ஏவும் நடிகருமான கருணாஸ், அம்மா ஜெயலலிதாவின் உழைப்பால் அதிமுக அரசு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தள்ளதாக தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணிய ஜெயலலிதாவின் எண்ணத்திற்கு எதிர்மறையான செயல்கள் தற்போது அரங்கேறி வருவதை, அவருடைய ஆன்மா ஏற்றுக்கொள்ளாது என்று சென்ட்டிமென்ட்டாக பேசினார் கருணாஸ். எனவே இரண்டு அணிகளும் இணைந்து கருத்து வேறுபாடுகளை மறந்து ஜெயலலிதா அறிவித்த திட்டங்களையும், மக்கள் நலப்பணிகளையும் தொடர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
ஜெயலலிதாவால் கிடைத்த ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் பூர்த்தியானால்தான் அவரின் ஆன்மா சாந்தியடையும். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒற்றுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் கருணாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications