திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கொள்ளையில் 3 பேர் கைது.. 32 கிலோ நகைகள் மீட்பு
வங்கி கொள்ளையில் 3 பேர் கைது செய்யப்பட்டு, நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
Recommended Video

திருவள்ளூர்: திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கி கொள்ளையில் வங்கியின் அலுவலக ஊழியர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 32 கிலோ நகைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.
திருவள்ளூர் ஜே.என்.சாலையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் தல் மாடியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த சனி, மற்றும் ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் நேற்று காலை வங்கிக்கு வந்த ஊழியர்கள், நுழைவு பகுதியில் உள்ள கேட் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, லாக்கர் அறையின் கதவு மற்றும் லாக்கர்களும் திறந்திருந்ததை கண்டு மேலும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வங்கி மேலாளர் போலீசாரிடம் புகார் அளித்ததன் அடிப்படையில் நேற்று விசாரணை துரிதமாக நடைபெற்றது. கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்கள் சேகரிக்கப்பட்டது. அத்துடன் அங்கிருந்த சிசிடிவி கேமராவினையும் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் வங்கி ஊழியர்களுக்கும் இந்த கொள்ளைக்கும் ஏதும் சம்பந்தம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடையே வங்கியில் கொள்ளை என்ற தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் வாடிக்கையாளர்கள் வங்கி முன் திரண்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் வங்கியின் ஊழியரே இதில் ஈடுபட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. அதன்படி அலுவலக உதவியாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கொள்ளைபோன 32 கிலோ தங்க நகைகளும் மீட்கப்பட்டன. பின்னர் மூவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் கள்ளசாவி போட்டு வங்கியினை திறந்து கொள்ளையடித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications