திருவள்ளூர் சுவர் இடிந்து 11 பேர் பலி - உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை: கலெக்டர் உறுதி
சென்னை: சென்னை அருகே குடோன் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 11 கட்டிடத் தொழிலாளர்கள் பலியான விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் உறுதியளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அலமாதி அருகே உள்ள உப்பரப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குடோனின் சுற்றுச்சுவருக்கு அருகேயே குடிசை அமைத்து வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இப்பகுதியில் கனமழை பெய்தது. இதில் புதிதாக கட்டப்பட்ட அக்குடோனின் சுற்றுச்சுவர் இன்று காலை இடிந்து குடிசையின் மீது விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி ஒரு பெண் உட்பட 11 தொழிலாளர்கள் பலியானார்கள்.
தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது. மேலும், குழந்தைகள் உட்பட பலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கட்டுமான பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
விபத்து நடந்த இடத்தை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:-
விபத்து...
காம்பவுண்டு சுவர் இடிந்து விபத்து நடைபெற்ற இடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் காலையில் விடிந்த பின்னர்தான் பொதுமக்கள் பார்த்து உள்ளனர்.
மீட்புப் பணி...
காலை 6 மணி அளவில் தகவல் கிடைத்ததும் போலீசாரும், மீட்பு படையினரும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.
11 பேர் பலி...
ஆனால் துரதிஷ்டவசமாக அதில் ஒருவரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. 11 பேர் பலியாகி உள்ளனர்.
ஆந்திர தொழிலாளர்கள்...
இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள். உயிர் இழந்தவர்கள் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் அவர்கள் பெயர் விவரம் போன்றவை முழுமையாக தெரியவில்லை.
அடையாளம்...
அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இது தெரிந்த பின்னர் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
நிவாரண நிதி...
இந்த விபத்து தொடர்பாக குடோன் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உயிர் இழந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசின் நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
உரிய நடவடிக்கை...
இந்த பகுதியில் அனுமதி மீறி பல குடோன்கள் கட்டப்பட்டு இருப்பதாக கூறப்படும் புகார்கள் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications