திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.. மிளகாய்ப்பொடி தூவி ஆட்சியரை கொல்ல முயன்ற கூலிப்படை!
திருவண்ணாமலை கலெக்டரை ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தே மிளகாய்ப்பொடி தூவி கூலிப்படையினர் கொல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை : ஆட்சியர் அலுவலகத்தில் வைத்தே திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியை கூலிப்படையினர் கொல்ல முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கடந்த 31ம் தேதி முதல் கே.எஸ்.கந்தசாமி பொறுப்பேற்றுள்ளார். இவர் தனது அலுவலை முடித்து விட்டு கலெக்டர் பங்களாவிற்கு மதிய உணவு சாப்பிட சென்றுள்ளார். அபபோது அவருடன் கலெக்டரின் நேர்முக எழுத்தர், டபேதார் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.

கலெக்டர் பங்களா கேட் அருகே சென்ற போது அவரைப் பின்தொடர்ந்து பைக் ஒன்றில் 3 பேர் வந்துள்ளனர். திடீரென அவர்கள் ஹெல்மெட்டை கழற்றி அவர் முகத்தின் மீது மிளகாய்ப்பொடியைத் தூவி தாக்கத் தொடங்கியுள்ளனர். இதில் கலெக்டர் கந்தசாமி, நிலைதடுமாறி கீழே விழுந்தத நிலையில் பாதுகாவலர்கள் ஓடி வந்து அவரை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து கொல்ல வந்த 3 பேரை போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர். பிடிபட்டவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கண்டிகை கிராமத்தை சேர்ந்த சிவா, மணிகண்டன் மற்றும் தாழம்பூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் விழுப்புரத்தில் உறவினர் ஒருவர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு வந்ததாகவும் பாரில் மது அருந்திய போது வேறொருவருடன் மோதல் ஏற்பட்டதாகவும் கூறினர். இதனையடுத்து அவரை பின் தொடர்ந்து வந்த போது அதே நிற சட்டை அணிந்திருந்ததால் ஆள்மாறி கலெக்டரை கொல்ல முயன்றதாகவும் கூறினர்.
எனினும் கலெக்டர் அலுவலகம் அருகிலேயே நடந்த இந்த கொலை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உண்மையிலேயே ஆள்மாறாட்டம் காரணமாக கொலை முயற்சி நடந்ததா, அல்லது பின்னணியில் வேறு ஏதேனும் சதி உள்ளதா என்றும் போலீசார் விசாரித்தனர்.
மது போதையில் இருந்த 3 பேர் மீதும் தடுப்பு காவல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications