சென்னை திருவொற்றியூர் நீதிமன்ற கட்டட கூரை இடிந்தது... உயிர் தப்பினார் நீதிபதி
சென்னை திருவொற்றியூர் நீதிமன்ற கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்ததில் நீதிபதி பிரேமாவதி உயிர் தப்பினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருவொற்றியூர் நீதிமன்ற கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அச்சமயம் நீதிபதி பிரேமாவதி உணவு இடைவேளைக்கு சென்றதால் உயிர் தப்பினார்.
திருவொற்றியூரில் குற்றவியல் நீதிமன்றம் உள்ளது. இந்த கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று அந்த கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நீதிமன்றத்தின் நீதிபதி பிரேமாவதி உணவு இடைவேளைக்கு வெளியே சென்றதால் அவர் உயிர் தப்பினார். இல்லையென்றால் அவருக்கு என்ன ஆகியிருக்குமோ என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடங்களை அரசு போர்கால நடவடிக்கையில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.












Click it and Unblock the Notifications