”ஓய்வுக்குப் பின் கிடைத்த உழைப்பின் மரியாதை” நல்லாசிரியர் விருது பெரும் ஆசிரியை நளினி பெருமிதம்!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ள ஆசிரியை கே.நளினி அதனை தன்னுடைய உழைப்புக்கு கிடைத்த மரியாதை என்று பூரித்துப் போயுள்ளார்.

"பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், விருது பெறுவது என் உழைப்புக்கு கிடைத்த மரியாதையாக கருதுகிறேன்" என்று அவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பாம்பன் தரவைதோப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையான அவர் இந்த வருடத்திற்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார்.

"மண்டபம் ஒன்றியம் கடுக்கா வலசையில் 1988 இல் முதன் முதலாக ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். கடைசியாக பாம்பன் தரவைதோப்பு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து, கடந்த மே 31 இல் ஓய்வு பெற்றேன்.

பள்ளி தலைமை ஆசிரியர் பழனி வழிகாட்டுதலின் படியும், சக ஆசிரியர்கள் ஒத்துழைப்பாலும், இந்த விருது எனக்கு கிடைத்துள்ளது. இதற்கு முதலில் என் தாய், தந்தையருக்கு நன்றி தெரிவித்து, அவர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.

கடந்த 2012 ஆம் ஆண்டு மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளேன்.நான் பணியில் இருக்கும்போது இந்த தேசிய விருது கிடைத்திருந்தால், இன்னும் மகிழ்ச்சியடைந்திருப்பேன். ஓய்வு பெற்ற பிறகு இந்தவிருது பெறுவது என் உழைப்புக்கு கிடைத்த மரியாதை என்றே சொல்வேன்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் நளினி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+