தமிழகம் முழுவதும் நடைபெறுவது ஜல்லிக்கட்டு அல்ல, போராட்டம்: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகம் முழுவதும் தற்போது நடைபெறுவது ஜல்லிக்கட்டு அல்ல என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருணன் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டை வலியுறுத்தி போராட்டம் மட்டுமே தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
சென்னை: தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது ஜல்லிக்கட்டை வலியுறுத்தும் போராட்டங்கள் தானே தவிர ஜல்லிக்கட்டு அல்ல என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதனை பயன்படுத்தி உச்சநீதிமன்றமோ அல்லது பீட்டா அமைப்போ நிரந்த தடைவிதிக்க முயற்சிக்க கூடாது என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் தமிழகம் முழுவதும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் நடைபெறுவது ஒரு விதமான உணர்ச்சிமிக்க போராட்டம் தான் என்றார்.
இது ஜல்லிக்கட்டு அல்ல என்று கூறிய பொன்.ராதகிருஷ்ணன் இந்தப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வைத்து உச்சநீதிமன்றமோ அல்லது பீட்டா அமைப்போ நிரந்தர தடைவிதிக்க கூடாது என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications