ண்ணோவ்.. அப்ப விஜய் ஓகே.. ஆனா கேள்வி கேட்டா ஜோசப் விஜய்யாக்கும்!
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி விஜய்யை சந்தித்ததை வைத்து டிவிட்டரில் மக்கள் பாஜகவினரை நோக்கி சுளீர் கேள்வி ஒன்றை கேட்டு வருகின்றனர்.
மெர்சல் படம் அது பாட்டுக்கு வந்து அது பாட்டுக்கு ஓடிப் போயிருக்கும். விட்டார்களா இந்த மத்திய ஆட்சியில் இருக்கும் பாஜகவினர்.. விடவில்லையே.. தேவையில்லாததை நோண்டி வெளியில் எடுத்து இப்போது ஏண்டா கையை வச்சோம் என்ற நிலைக்குப் போய் விட்டனர். அவர்கள் விட்டாலும் இனி மக்கள் விடுவதாக இல்லை.
இதுவரை பாஜகவினர் மீது இருந்து வந்த மொத்த கோபத்தையும் கொட்டி இறக்கிக் கொண்டிருக்கின்றனர் சமூக வலைதளங்களில் எந்த பாஜக தலைவரின் பேஸ்புக், டிவிட்டர் பக்கம் போனாலும் வசவுச் சத்தம் காதுகளைக் கிழிக்கிறது.
இந்த நிலையில் 2014ம் ஆண்டு பிரதமர் மோடி, நடிகர் விஜய் சந்திப்பை வைத்து ஒரு கேள்வி ஓடிக் கொண்டிருக்கிறது சமூக வலைதளங்களில். நியாயமான கேள்விதான், வாஸ்தவமான கேள்வியும் கூட. இதுதான் அது.
Dirty politics of #BJP ! @actorvijay
— ayan (@ayanbeatz) October 23, 2017
#Vijay #TamiliansVsModi #ModivsMersal #BJP_भगाओ_देश_बचाओ #BJPfails #Bjpexposed #bjpflopshowinguj ! pic.twitter.com/hCSzOq8c6h
2014ம் ஆண்டு என்னிடம் ஓட்டுக் கேட்க வந்தபோது நான் விஜய். ஆனால் இப்போது நான் கேள்வி கேட்க ஆரம்பித்ததும் ஜோசப் விஜய்யா என்று விஜய்யே கேள்வி கேட்பது போல உள்ளது அது.
ண்ணோவ்.. பதில் சொல்லுங்கண்ணோவ்!