தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுகள் அரச பயங்கரவாதம்.. ராகுல் காந்தி கடும் தாக்கு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியிர் உயிர்க்கொல்லி ஆலையான ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் கொலை வெறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,

அரச பயங்காரவாதம்
தமிழகத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 9 பேரை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். அரச பயங்கரவாதத்திற்கு இது ஒரு காட்டு மிராண்டித்தனமான எடுத்துக்காட்டாகும்.
|
உயிரிழந்த தியாகிகள்
அநீதிக்கு எதிராக போராடிய மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த தியாகிகளின் குடும்பங்களுக்கும் இரங்கலையும் காயமடைந்தவர்களுக்கு பிரார்த்தனையையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

மிகுந்த துயரம் அடைந்தேன்
இதேபோல் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் இன்று 11 பேர் கொல்லப்பட்டதை அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

11 பேர் பலி?
மாநிலத்தில் அமைதியை பராமரிக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் ஆளுநர் தனது அறிக்கையில் 11 பேர் பலி என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications