வெடித்தது ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிளர்ச்சி- 7 கிராமங்களில் மக்கள் போராட்டம்- அரசுக்கு கெடு!
Recommended Video

சென்னை: நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தூத்துக்குடியை சுற்றிய கிராமங்களில் வெடித்திருக்கிறது. அ.குமரெட்டியாபுரத்தில் தொடங்கிய போராட்டம் 7 கிராமங்களில் தற்போது நடைபெறுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூட நாளை மாலை வரை அரசுக்கு கிராம மக்கள் கெடு விதித்துள்ளனர்.
தூத்துக்குடி சுற்றி வட்டார கிராமங்களில் நிலம், நீர், காற்று என அனைத்தையும் நச்சாக்கி நாசப்படுத்தியிருக்கிறது ஸ்டெர்லைட் தொழிற்சாலை. வேதாந்தா குழுமத்தின் இந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 54 நாட்களுக்கு முன்னர் குமரெட்டியாபுரத்தில் தொடர் போராட்டம் தொடங்கியது. இப்போது மீளவிட்டான், தெற்கு பாண்டியாபுரம் என மொத்தம் 7 கிராமங்களில் ஸ்டெர்லைட்டை ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் தூத்துக்குடி மாணவ மாணவியரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக களம் இறங்கியுள்ளனர். தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அறிவிப்பை நாளை மாலைக்குள் அரசு வெளியிட வேண்டும் என குமரெட்டியாபுரம் மக்கள் கெடு விதித்துள்ளனர்.
அரசு அப்படி அறிவிப்பை வெளியிடவில்லை எனில் இனி ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிடும் தொடர் போராட்டம் நடைபெறும் என எச்சரித்துள்ளனர். இதனால் தூத்துக்குடி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications