தாழ்வாக சென்ற மின் வயர் மீது விழுந்த பள்ளி மாணவன் பலி.. கொடுக்காப்புள்ளி பறித்த போது பரிதாபம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தாழ்வாக சென்ற மின் வயரில் பட்டு பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் அலட்சியமே இந்த சோக சம்பவத்திற்கு காரணம் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரை சேர்நதவர் கஜேந்திரன். பெட்டி கடை நடத்தி வருகிறார். இவருக்கு மகன்கள் உத்திரகுமார், சண்முகவேல், மகள் பிருந்தா லெட்சுமி ஆகியோர் உள்ளனர். சண்முகவேல் அங்குள்ள தொடக்க பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தான்.

அவனது பள்ளி கட்டிடத்தின் அருகே கொடுக்காபுள்ளி மரம் உள்ளது. மாணவர்கள் பள்ளி கட்டிட மொட்டை மாடியில் ஏறி மரத்திலிருந்து கொடுக்காபுளி பறிப்பது வழக்கம். பள்ளியின் மேல் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்லும் நிலையில் மாணவர்கள் ஆபத்தை அறியாமல் தினமும் சென்று வந்துள்ளனர்.
பள்ளியின் சாவியை தலைமை ஆசிரியை அந்தோணி சின்னம்மாள் சண்முகவேலிடம் கொடுத்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளியில் ஆசிரியர் கூட்டம் நடைபெறுவதாக இருந்ததால் பள்ளியைத் திறக்கச் சென்றுள்ளான் சண்முகவேல். அப்போது அவனது நண்பர்கள் வழக்கம் போல் கொடுக்காபுளி பறிக்க கூப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து சண்முக வேல், நண்பர்களுடன் பள்ளி கட்டிடத்தில் ஏறி கொடுக்காபுளி பறித்துள்ளான். இதனை அங்கு கூட்டத்திற்கு வந்த ஆசிரியர்கள் கவனித்து கீழே இறங்குமாறு மாணவர்களை எச்சரித்துள்ளனர். இதனால் மாணவர்கள் மின் வயரை தாண்டி கீழே குதித்துள்ளனர்.
அப்போது சண்முகவேல் நிலை தடுமாறு மின்வயரில் விழுந்தான். இதில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பல முறை எடுத்து கூறியும் அலட்சியம் காட்டிய மின் வாரியத்தை கண்டித்து அங்கு பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
ஜெயித்தது தூத்துக்குடியில், நன்றி சொல்வது திருச்செந்தூரிலா.. ஸ்ரீநாத்தை கிண்டல் செய்யும் கட்சிகள் -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications