சாலையில் கிடந்த கேமராவை எடுக்கச் சென்று விபத்தில் சிக்கிய மாணவர் பலி - ஓட்டுநருக்கு அடி உதை
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சாலையில் தவறி விழுந்த தனது கேமராவை எடுக்கச் சென்ற போது பேருந்து மோதி கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த மற்ற மாணவர்கள் விபத்துக்குக் காரணமாக பேருந்து ஓட்டுநரை அடித்து உதைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே சுற்றுலா வந்திருந்த கல்லூரி மாணவர்கள் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ராமன் என்ற மாணவருடைய கேமரா தவறுதலாக சாலையில் விழுந்து விட்டது.
கேமராவை எடுப்பதற்காக சென்ற மாணவர் மீது எதிர்பாராத விதமாக அந்த வழியே வந்து கொண்டிருந்த பேருந்து மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அம்மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள், விபத்திற்கு காரணமாக பேருந்தைச் சிறை பிடித்து, பேருந்து ஓட்டுநரை அடித்து உதைத்தனர். இதில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டார்.












Click it and Unblock the Notifications