தொடர் தற்கொலைகள் எதிரொலி.. வெளிமாநிலத்தில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய விதி
வெளிமாநிலத்திற்கு படிக்க செல்லும் மாணவர்கள் தமிழக அரசிடம் தங்கள் சுய விபரத்தை பதிவு செய்ய வேண்டும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: வெளிமாநிலத்திற்கு படிக்க செல்லும் மாணவர்கள் தமிழக அரசிடம் தங்கள் சுய விபரத்தை பதிவு செய்ய வேண்டும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
சமீப காலமாக வெளிமாநிலத்தில் படிக்கும் தமிழக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கிறது. இன்று கூட டெல்லி யு.சி.எம்.சி மருத்துவக்கல்லூரியில் தமிழக மாணவர் சரத் பிரபு தற்கொலை செய்து கொண்டார். இவர் திருப்பூரை சேர்நதவர்.

தற்போது இதுகுறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதில் ''வெளி மாநிலங்களில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும்'' என்று கூறியுள்ளார்.
மேலும் ''வெளிமாநிலத்திற்கு படிக்க செல்லும் மாணவர்கள் அரசிடம் சுயவிவரங்களை அளிக்க வேண்டும். தற்போது படித்துக் கொண்டு இருக்கும் மாணவர்களும் தங்களை சுயவிவரங்களை வெளியிட வேண்டும்'' என்றும் அவர் கூறியுள்ளார்.
இது வெளிமாநிலத்தில் தமிழக மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், தற்கொலை சம்பவங்களையும் குறைக்க உதவும் என்று கூறப்படுகிறது. இதற்கான முறையாக நடைமுறைகள் இன்னும் சில தினங்களில் கொண்டுவரப்படும்.












Click it and Unblock the Notifications