Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

115 சத்துணவு அமைப்பாளர் பணியிடம்: குவிந்த பெண்களை பார்த்த அதிகாரிகள் திகைப்பு

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் 115 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டதால் அதிகாரிகள் திகைக்தனர்.

நெல்லை மாவட்ட சிறுபான்மை பள்ளிகளில் 115 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கான நேர்முக தேர்வு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பித்த 10 யூனியன்களை சேர்ந்த 3,300 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

Thousands of women throng for govt. job in Tirunelveli

இவர்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நெல்லை ஆர்டிஓ அலுவலகம், நெல்லை கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் அலுவலகம், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேர்முக தேர்வு நடந்தது. இந்த நேர்முக தேர்வு கலெக்டரின் நேரடி பார்வையில் நடந்தது.

இதில் தகுதியானவர்கள் பட்டியல் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பரிந்துரைக்கப்படும். அதன் அடிப்படையில் கலெக்டர் பணி நியமன ஆணை வழங்குவார் என சத்துணவு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேர்முக தேர்விற்காக பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடனும், பெற்றோருடனும் வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் திருவிழா கூட்டம் போல் இருந்தது.

குறைந்த இடத்திற்கு இத்தனை பெண்கள் போட்டியிட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+