115 சத்துணவு அமைப்பாளர் பணியிடம்: குவிந்த பெண்களை பார்த்த அதிகாரிகள் திகைப்பு
நெல்லை: நெல்லையில் 115 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டதால் அதிகாரிகள் திகைக்தனர்.
நெல்லை மாவட்ட சிறுபான்மை பள்ளிகளில் 115 சத்துணவு அமைப்பாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கான நேர்முக தேர்வு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பித்த 10 யூனியன்களை சேர்ந்த 3,300 பேர் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு நெல்லை கலெக்டர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நெல்லை ஆர்டிஓ அலுவலகம், நெல்லை கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் அலுவலகம், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேர்முக தேர்வு நடந்தது. இந்த நேர்முக தேர்வு கலெக்டரின் நேரடி பார்வையில் நடந்தது.
இதில் தகுதியானவர்கள் பட்டியல் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பரிந்துரைக்கப்படும். அதன் அடிப்படையில் கலெக்டர் பணி நியமன ஆணை வழங்குவார் என சத்துணவு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேர்முக தேர்விற்காக பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடனும், பெற்றோருடனும் வந்திருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் திருவிழா கூட்டம் போல் இருந்தது.
குறைந்த இடத்திற்கு இத்தனை பெண்கள் போட்டியிட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications