ஆலையை மூடாமல் மக்களை கொன்று குவித்த தமிழக அரசு.. தவ்ஹீத் ஜமா அத் பாய்ச்சல்!
ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தவ்ஹீத் ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு பதிலாக மக்களை கொன்று குவித்த தமிழக அரசின் இந்த செயலானது மிகவும் கொடுமையானது என்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் சார்பாக கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் அந்த தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணை பொதுச்செயலாளர் முஹம்மது ஷில்பி கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு வலியுறுத்தி போராடிய மக்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதின் விளைவாக இதுவரை ஒரு மாணவி உள்பட 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 60 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.ஜனநாயக வழியில் போராடிய மக்கள் மீது இரக்கமின்றி துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களை கொலை செய்திருக்கும் காவல்துறையின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.
ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்படும் துன்பங்களை சந்திக்கும் மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஒன்றுபட்டு போராடி வருகிறார்கள். மக்களுக்கு அழிவை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குப் பதில் மக்களைக் கொன்றுக் குவிக்கும் தமிழக அரசின் செயல் மிகக் கொடுமையானதாகும்.
ஜனநாயக வழி போராட்டம் காவல்துறையால் திட்டமிட்ட வன்முறையாக மாற்றப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை வீரியத்துடன் ஒருங்கிணைத்து நடத்தி சென்ற தோழர் தமிழரசன் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டிருப்பது காவல்துறையின் மீது சந்தேகத்தை மேலும் வலுக்க செய்கிறது. துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்று, உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.தமிழக அரசு ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். நியாயமாக போராடும் மக்களுக்கு ஆதரவாக நாம் என்றும் துணையாக இருப்போம். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு முஹம்மது ஷிப்லி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications