சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டலால் விடுமுறை - காவல்துறையினர் விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இன்று பள்ளி ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வியாசர்பாடியில் வ.உ.சிதம்பரனார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இந்த தனியார் பள்ளியின் அலுவலகத்திற்கு இன்று காலை 8.50 மணி அளவில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, அப்பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்து பள்ளிக்கு வந்த காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
தகவல் அறிந்த குழந்தைகளின் பெற்றோர்கள், பள்ளிக்கு விரைந்து தங்களது குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், பள்ளியில் எந்த வெடிகுண்டும் கிடைக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications