For Quick Alerts
For Daily Alerts
Just In
நீச்சல் தெரியாமல் குளத்தில் மூழ்கி மூன்று கல்லூரி மாணவர்கள் சாவு- வீடியோ
வேலூர் காட்பாடியில் கல்லூரி மாணவர்கள் மூவர்,குளத்தில் குளிக்க சென்ற போது நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: வேலூர் காட்பாடியில் குளிப்பதற்காக குளத்துக்குள் இறங்கிய மூன்று கல்லூரி மாணவர்கள் நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளனர். இதனால் அப்பகுதியே சோகத்தில் உள்ளது.
சேலம் காட்பாடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிரவீண், சித்தார்த், ஹரிகுமார் என மூன்று மாணவர்கள் படித்து வந்தனர். இவர்கள் மூவரும் நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முடித்துவிட்டு, குளத்துக்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
ஆனால் மூவருக்கும் நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதனைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததும் அவர்கள் வந்து மூவரது உடலையும் மீட்டனர். போலீசார் அந்த உடல்களை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Comments
English summary
Three college students near Katpadi sunken into pool water and died and their body sent for postmortem to Vellore government hospitals.
Story first published: Thursday, May 25, 2017, 17:20 [IST]